தமிழ் வான் அவை நிகழ்வுகளைக் கண்டுகளிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

வியாழன், 8 டிசம்பர், 2022

27.11.2022 இலக்கியத்தில் அறிவியல்



இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் 29.11.2022 அன்று தமிழ் வான் அவை நடத்திய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி வரவேற்புரை ஆற்றிய - இளமுனைவர் பூங்குழலிப்பெருமாள் அறிமுகவுரை ஆற்றிய - முனைவர் கீதா சிறப்பு உரையாளர் - தமிழ்நாட்டு அரசு நடத்தும் மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் பா. அன்புச்செழியன் சிற்றுரை ஆற்றியோர் - பேராசிரியர் . சண்முகதாஸ் இலக்கியக் கடல் அகளங்கன் எழுத்தாளர் ஹேமா இராமச்சந்திரன் – டென்மார்க் முனைவர் திவாகரன் – அண்ணாநகர் தமிழ்ச் சங்கம் மருத்துவ மானுடவியலாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முனைவர் ரேவதி கவிஞர் உஷா வரதராஜன் கவிஞர் பொலிகை ஜெயா நன்றியுரை ஆற்றிய - எழுத்தாளர் கலா ஜீவகுமாரன் ஆகிய அனைவருக்கும் கலந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்


  வணக்கம் அம்மா! தங்கள் பேரன்புக்குப் பெரிதும் கடப்பாடு உடையேன். தங்கள் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. தாங்களும் சிறப்பாகத் தொகுத்துத் தந்தீர்கள்!பாராட்டுகள். அன்றைய நாளில் அரை மயக்கத்தில் ஆழ்ந்தபடிதான் உரைகளைக் கேட்க முடிந்தது. இதுவரை எவரும் கூறாத பல கருத்துக்களை வைத்திருக்கிறேன். "பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண்டும்அறி யேனையே." இதில் வரும் எட்டு எது?இரண்டு எது? என்பதில் சைவப் பெருமக்கள் இடையே கருத்து வேறு பாடு உண்டு! இதற்கு இக்காலக் கணினி இயலில் பொருத்தமான விளக்கம் வைத்திருக்கிறேன். ஓமியோபதி தத்துவம், இக்கால webcam தத்துவம்....போன்றவற்றைத் திருக்குறளில் காணலாம் பிக்பாங் பற்றி மாணிக்க வாசகர் குறிப்பிடுகிறார்- விரிவாகக் குறிப்பிடுகிறார்: அத்தனையும் உண்மை. மகப் பேறு , கரு உருவாதல், வளர்ச்சி....போன்றவற்றைத் திரூமூலர் மிகத் தெளிவாக எழுதுகிறார். இன்று ஒப்புக்கொள்ளப்படும்கணித, பௌதீக, வேதியல் விதிகள் பலவற்றை நம் இலக்கியங்களில் காணலாம். காலம் கனியின் இறையருள் திருவருள் புரியின் இவை கட்டுரை வடிவம் பெறும் . நனி நன்றியன் பெஞ்சமின்

2 கருத்துகள்:

  1. தமிழ் வான் அவையின் ஆழ்கடல் முத்துக்களில் ஒன்றாக அமைந்தது ஐயாவின் உரை சிறப்பு நல்ல தகவல்கள் அருமையான நிகழ்ச்சி

    பதிலளிநீக்கு

வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்